இலங்கை
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொலன்னாவ பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், காலி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய ஆண் ஒருவரும், பானந்துறை பகுதியை 67 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் மொரட்டுவ பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன் களுத்துறை பகுதியை 90 வயதுடைய பெண் ஒருவரும், பிலியந்தல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரும், இரத்தினபுரி பகுதியை 66 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.