இலங்கை
சந்திவெளி திகிலிவட்டை இடையே புதிய பாலம் அமைப்பதற்கான திட்டம்

சந்திவெளி திகிலிவட்டை இடையே பாலம் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (12) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரனின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் ஒரு பாலமாக இப்பாலம் அமையவுள்ளதாகவும், மக்களின் போக்குவரத்தினை இலகுப்படுத்தவும், விவசாயத்தையும், விலங்கு வேளாண்மையும் மேம்படுத்துவதற்கும் இப்பாலம் உதவியாக அமையும் என்றும் கூறினார்.
மட்டக்களப்பில் வளமான விவசாய காணிகளும் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிலங்களும் காணப்படுவது நமது மாவட்டத்திற்கு கிடைத்த பெரும் வளமாகும்.
பாலம் தொடர்பான சாத்தியவள அறிக்கைகளின் அடிப்படையில் பாலத்தின் படவரைபினை விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் முன்னெடுக்கவுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.