இலங்கை
சிவனொளிபாத மலை யாத்திரை ஆரம்பம்

2021ஆம் ஆண்டுக்கான புனித சிவனொளிபாத மலை யாத்திரைக்கான பருவகால நோண்மதி தினம் இன்று ஆரம்பமானது.
இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமஹா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக நேற்று நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த முறை 4 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணித்தது.
சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுள் ஒரே தடவையில் 200 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் யாத்திரையில் பங்கேற்கும் அடியார்கள் தத்தமது பிரதேச செயலகங்களில் பதிவு செய்வதுடன் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதைனை பொதுசுகாதார பரிசோதகர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி பத்திரமொன்றை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.