சினிமா
படம் வெளியாகி மூன்று நாட்களில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழுவினர்

கடந்த 10 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலோனா’ படத்தின் சக்சஸ் பார்ட்டியை கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக கலக்கி வந்தவர் சந்தானம். இவர் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம், சபாபதி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த 10 ஆம் தேதி ‘டிக்கிலோனா’ படம் நேரடியாக ரிலீசானது.
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான பாரீஸ் ஜெயராஜ் படம் சூப்பர் ஹிட்ட்டித்தது. A1 படத்தை இயக்கியிருந்த ஜான்சன் கே இந்த படத்தையும் இயக்கியிருந்தார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் ஏற்கனவே சந்தானம் நடித்து முடித்துள்ள சர்வர் சுந்தரம், சபாபதி போன்ற படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிக்கிலோனா படத்தில் அவருக்கு ஜோடியாக அனைகா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஹர்பஜன் சிங், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி வெளியான ‘டிக்கிலோனா’ படம் சுமாரான விமர்சனங்களையே பெற்றுள்ளது. மேலும் இந்தப்படத்தில் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்து நகைச்சுவை காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் படம் வெளியாகி மூன்று நாட்களில் படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டி நடத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சந்தானம் மூன்று விதமான கெட்டப்களில் ‘டிக்கிலோனா’ படத்தில் நடித்திருந்தார். டைம் டிராவலை மையப்படுத்தி நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டி கொண்டாடியுள்ளதாய் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.