சர்வதேசம்
பிரேசிலை விடாத கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அங்கு வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73 லட்சத்தைக் கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 250 ஐ- கடந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.50 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 7.75 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.