Uncategorized
மேலும் 139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 89 ஆயிரத்து 90 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 786 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம், நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 566 ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Continue Reading