இலங்கை
வயலுக்கு வந்த யானை வெடி மூலம் அனுப்பல் – விவசாயம் சேதம்

வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட மக்கிளானை பள்ளிமடு விவசாய கண்டத்தில் வருகை தந்த யானைகளை வனஜீவராசிகள்திணைக்களத்தினால் சத்த வெடி மூலம் காட்டுப் பகுதிக்கு துரத்தப்பட்ட சம்பவம் இன்றுபுதன்கிழமை இடம்பெற்றது.
மக்கிளானை பள்ளிமடு விவசாய கண்டத்தில்தொடர்ச்சியாக யானைகளின் வருகையை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு சிரமங்களைஎதிர்நோக்கி வருவதுடன், இரவு நேரங்களில் வயல் காவல் செய்வதில் தங்களுக்கு உயிர்அச்சுறுத்தல் உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். வயல் பகுதிக்கு பிரவேசித்த யானை வயல்நிலங்களை அழித்து விவசாயிகள் செய்கை செய்யப்பட்ட சோளம் மற்றும் கச்சான் என்பவற்றைஅழித்து நாசம் செய்துள்ளதுடன், வயல் காவலாளியின் குடிசையையும் துவம்சம் செய்துள்ளதாகவிவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதிகளுக்கு யானைகள்தொடர்ச்சியாக வருகை தருவது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் விடுத்தபட்சத்தில் கிரான் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வருகை தந்து சத்த வெடி மூலம் யானையை காட்டுபகுதிக்கு விரட்டப்படுவதுடன், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்றதும் சிறிதுநேரம் கழித்து மீண்டும் யானைகள் வயல் பகுதிக்கு வருகை தருவதாக விவசாயிகள்தெரிவிக்கின்றனர். யானை தொல்லையில் இருந்துவிவசாயத்தினை பாதுகாப்பதா அல்லது வெள்ளம் மற்றும் நோய் என்பவற்றில் இருந்துவிவசாயத்தினை காப்பாற்றுவதா அல்லது எங்களின் உயிரை காப்பாற்றுவதா என்ற கவலையில் எங்களதுஒவ்வொரு நாளையும் கழிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறான பிரச்சனைகள் தொடர்ச்சியாகவரும் நிலையில் வங்கிகளின் கடன் மற்றும் நகைகளை அடகு வைத்து விவசாய செய்கையில்ஈடுபட்ட விவசாயிகள் தொடர்ச்சியாக கடன் சுமையுடன் கடன்காரனாக வாழ வேண்டியதுர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே இவ்வாறான பிரச்சனைகளைதீர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் உரியநடவடிக்கையை மேற்கொண்டு யானை பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு விவசாயிகள்கோரிக்கை விடுக்கின்றனர்.